நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

29 August 2012

பேசாதே!



இறக்கும்வரை வாழ்ந்துக்கொண்டு இருப்பேன்
வாழும்வரை இறந்துக்கொண்டும் இருப்பேன்
உன் மீதான காதலால்

எச்சில் என 
என் முத்தங்களை
துடைக்கும் முன்
சற்றே ருசித்துப்பார்..
உப்பின் சுவையும் கலந்திருக்கும் 
உன்னாலே உருவான
என் கண்ணீர் துளிகளினால்..

நாம்
பிரிந்திருக்க
தேவைப்படவில்லை
ஒரு காரணமும்
ஆனால்..
சேர்ந்திருக்க
தேவைப்படுகின்றன
சில காரணங்களாவது

உன்னுடன் பேசாமல்
ஒரு நிமிடமாவது
இருக்க முடியுமா?
மௌனமாய் கேட்கிறது
என் அலைபேசி..

மயிலிறகு அதிகமானால்
வரும் பாரத்தை விட
காதல் அதிகமானால் 
வரும் பாரம் அதிகம்தான்!!!

17 August 2012

மழை வரும் போதெல்லாம்


மழை வரும் போதெல்லாம்
நீயும் வருகிறாய்
துளிகளாக இல்லாமல்
நெஞ்சில் வலிகளாக

கையில் பிடித்தபின்னும்
நிற்காத துளிகளாய்
நாம் கைபிடித்த பின்னும்
நீண்ட தூரத்தில்

ஏதோ பேச நினைத்து
நான் அழைத்த அழைப்பெல்லாம்
உன் குரல் கேட்ட நொடியினிலே
உடைந்து சிதறுகின்றன
கண்களில் நீர் துளிகளாய்
காதலுக்கு மறுபெயர் கண்ணீரா?

துவைக்க விருப்பமில்லாத
வேர்வை வாசம் நிறைந்த
உன் சட்டை 
உனக்கான இடத்தை 
என்னுள் நிரப்பியபடி

நனைந்த இலைகள் கூட
ஒன்றை ஒன்று முத்தமிட்டபடி
நான் நிற்கிறேன்
மரமெனவே..

ஜன்னல் கம்பியிலே
இரு பறவைகள்..
ஒன்றாய் அணைப்பினிலே
நானும் 
நீ பரிசளித்த பொம்மையும்
அவற்றை போலவே...

மிக மெல்லிய 
காதல் பாடல்
எங்கோ ஒலிக்கிறது
நம்முடைய 
பிரிவின் குரலாய்..

எனக்கிருக்கும் வலி
உனக்குள்ளும் இருக்கும்தானே?
உன்னை அழைக்க முயல்கிறேன்
மீண்டும் மழை..
Related Posts Plugin for WordPress, Blogger...