நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

17 March 2012

நீ கவலைகளை பரிசளிக்கிறாய்

நான் கவிதைகளை பரிசளிக்கிறேன்
நீ கவலைகளை பரிசளிக்கிறாய்


எதிர்பாராத நேரங்களில் 
எதிர்ப்பட்டு விடுகிறது
உன் கோபமும்
என் கண்ணீரும்

என் முகம் மறைத்து 
ஓடிவிடவே தோன்றுகிறது
நீ முகம் காட்டும் வேளைகளில்

என் கேள்விகளுக்கெல்லாம் 
உன் மௌனங்கள் 
சரியான பதிலில்லை என்றாலும் 
தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறேன்

பொறுமை இழந்து போகிறது
என் மனம் 
பெருமை இழந்து போன 
நம் காதலால்

'என்றாவது என்னை 
நீ புரிந்து கொள்வாய்'
உணர்ச்சிகள் மேலிட 
நான் பேசுகையில் 
உன் கண்கள் காட்டும் 
வெறுமைகள் 
எனக்கு புரியவேயில்லை

பருவமாற்றம் போலவே 
மாற்றி மாற்றி உன்னை 
வெறுத்ததிலும் விரும்பியதிலும் 
வறண்ட வானிலையில்
நம் காதல் நிலா

உன்னுடைய எல்லைகளில் நீயும்
என்னுடைய இயலாமைகளில் நானும் 
ஊடலும் கூடலுமாய் 
விளையாடுகையில்
ஏனோ..
என் நினைவில் வருகிறது 
சிறுவயதில் விளையாடிய 
'அப்பா அம்மா விளையாட்டு' 

Related Posts Plugin for WordPress, Blogger...