நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..
18 August 2011
13 August 2011
நீ சிணுங்குகிறாய் காதலியாய்
உன்னை வரையும் போது
சிலிர்த்து நிற்கிறது தூரிகையும்
சிலிர்த்து நிற்கிறது தூரிகையும்
ஓவியமாய் நீ இருந்தாலும்
பேசமறந்து நிற்பது நானே
காதலுடன் பார்க்கிறேன்
என்னை நானே
கண்ணாடியிலும்
உன் கண்களிலும்
நீ கடித்து
பாதி தந்ததால்
சிவந்து போனது
கொய்யாப்பழம்
நீ அழைக்கும் போதுமட்டும்
காதலாய் சிணுங்குது கைபேசி
அழைப்பை ஏற்றபின்
காதலுடன் சிணுங்குகிறாய் நீ
சிறு வயதில்
பள்ளிகூட வாசலில்
அம்மா காத்திருந்திருப்பாள்
உன் வருகைக்காய்
கல்லூரி வாசலில்
காத்திருக்கிறேன் நான்
உனக்கே உனக்கென
இன்னுமொரு அம்மாவாய்
புத்தகம் பேனா பென்சில்
எல்லாம் தொலைத்தது போல
என் இதயத்தையும் தொலைத்துவிடாதே
எங்கேனும் பத்திரப்படுத்தி வை
மைனாக்களை ரசிக்கிறேன் என்று
மையிட்ட கண்களினால்
முறைத்தபடி நிற்கிறாள்
என் முன்னே
இறகுகளை ரசிக்கட்டுமா
இல்லை
இமைக்கவும் மறந்து
இவளை ரசிக்கட்டுமா?!
04 August 2011
பிரிவுக்கு ஓர் ஒத்திகை
03 August 2011
காதல் பேசேன்
பெண்ணே! உன் மீது கொண்ட காதலால்..
சிட்டு குருவி ஒன்று
தினமும் நீ குளிக்கையில்
எட்டிஎட்டி பார்த்து போகிறது
ரசித்து சிரிக்கிறாய் அதற்காக
எதிர்வரும் பெண்களை
நான் ஏறிட்டு பார்த்தாலே
ஏன் இப்படி கோபப்படுகிறாய்?
வேறு வேறு நியாயங்களா
உனக்கும் எனக்கும்..!
மீசைக்குள் ஒளித்து வைக்கிறேன்
என் கோபங்களையெல்லாம்
எல்லாம் வெளிப்படுகின்றன
முத்தங்களாய் உன் முன்னே
கூட்டத்திலும் பேசாதவன்
தனிமையிலும் பேசிக்கொண்டே இருக்கிறேன்
பெண்ணே! உன் மீது கொண்ட காதலால்..
பள்ளியிலும் கல்லூரியிலும்
படிக்காமல் சுற்றிதிரிந்தவனை
இரக்கமின்றி படிக்கவைக்கிறாய்
இரவு பகலாய்
அப்போது போலவே
இப்போதும் தோற்கிறேன்
உன் இதயத்தை படிக்கமுயன்று..
உனக்கெனவே வாங்குகிறேன்
கரடி பொம்மைகளை
ஆனால்.. பொறாமையோடு
Subscribe to:
Posts (Atom)