நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

06 May 2011

சமையல் முடிந்துவிட்டது




அவசரமாய் சமைத்துக்கொண்டிருந்தவளிடம்
"என்ன இருக்கிறது?" என்றேன்..
"சாம்பாரும், சாதமும்" என்றாள்
எரிச்சலும் கோபமுமாய் 
"தொட்டுக்கொள்ள என்ன?" என்றவனிடம்
நீட்டுகிறாள் அவளின் ஒற்றைவிரலை
கண்ணால் சிரித்தபடி..


1 comment:

  1. என் சமையலறையில்-பாடல் போல் மென்மையாக உள்ளது!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...