நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

10 March 2011

முதல் குற்றம்



மறக்க மனதால் முடியவில்லை
முதல் குற்றம்...
நீ செய்தாயா இல்லை?
முடிவில் நான் செய்தது குற்றமா!
புரியவில்லை...

என் இருப்பையும் இறப்பையும்
தினமும் சோதிக்கிறது உன் காதல்
காற்றில் ஈரம் குறைகிறது
ஆனால்
கண்களில் வற்றிபோகவில்லை

ஒன்றாக இருந்தோம்
இப்போது ஒன்றாக இருக்கிறேன்

எது இணைத்தது? எது பிரித்தது?
எப்போது சந்தித்தோம்?!
ம்ம்.. 
நினைவின் மகிழ்ச்சியை விட
ஏன் சந்திதொமென்ற 
எண்ணமே மேலோங்கி நிற்கிறது 

வலி இல்லாமல் காதல் இல்லை
ஆனால்...
வலி தாங்கும் நிலையில்
என் இதயம் இல்லை

புரிந்தாலும் புரியாதது போல் 
நீ போனாலும்
போகும் வழியில்
ஏதேனும் இருக்கும்

என் கண்ணீரையும் காதலையும்
உனக்கு நினைவு படுத்திகொண்டு...©

0 கருத்துரைகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...